Posts

Showing posts from August, 2024

சிவானந்தலஹரி-30-‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’

Image
  சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம் வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா । பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥ முந்தின ஸ்லோகத்துல, ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’ னு சொன்னார்.  அங்க ‘ லோககுரு’ங்கிறார். இங்க ‘த்ரிலோகீகு³ரோ’ – மூவுலகத்துக்குமே நீதான் குரு என்கிறார். ‘பா³லேந்து³ சூடா³மணே’ – இளம்பிறை சந்திரனை நெற்றியில, மௌலில அணிந்து கொண்டு இருப்பவரே! ‘ பஶுபதே’ – எல்லா உயிர்களுக்கும் தலைவரே! ‘ஸ்வாமின்’ – என்னுடைய தலைவரே!  உங்களுக்கு பூஜை பண்ணனும்னு ஆசைப்படறேன். இப்ப தான் சிவராத்திரி ஆச்சு. சிவராத்திரியின் போது மத்த நாளைவிட கொஞ்சம் விமரிசையா நம்ம ஆத்துல ஒரு பூஜை பண்ணி சந்தோஷப் பட்டுப்போம். ஆனா ‘பகவானுக்கு உண்மையான பூஜை எது? அதை பண்ண முடியுமா நம்மால?’ அப்படீன்னு ஆச்சாரியார் வியக்கறார். ‘ வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴’ -உனக்கு வஸ்த்ரம் உடுத்தி உபசாரம் பண்ணனும்னா, ‘ஸஹஸ்ரகரதா’ – சூரியனைப் போல ஆயிரம் கைகள் வேணும். ஏன்னா, பகவான் அவ்ளோ ப

சிவானந்தலஹரி-29 - ஏக பக்திர் விசிஷ்யதே!!

Image
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் ‘ த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி’ ங்கற ஸ்லோகத்தைப் பார்ப்போம். ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தநே’ – பரமேஸ்வரா, மஹாதேவா அப்படீன்னு சங்கீர்த்தனம் பண்றது ஸாமீப்யம்.   ‘ ஶிவப⁴க்தி து⁴ர்யஜநதா ஸாங்க³த்ய ஸம்பா⁴ஷணே ஸாலோக்யம்’- வந்திருந்தவா எல்லாரும் ஸ்வாமிகளுடைய அத்யந்த பக்தர்கள். அந்த மாதிரி அவாளோட கூடி ஸ்வாமிகளைப் பத்தி பேசி, சுந்தரகுமார், அவா பெரியவா பேசும்போது, பாகவதத்துல இருந்து ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி, எப்படி ஸ்வாமிகள் இந்த ஸம்ஸார ஸாகரத்தை தாண்டினாரோ, அந்த மாதிரி நம்மையும் தாண்டுவிக்கணும், அப்படீன்னு நாம இந்த ஆராதனை தினத்துல வேண்டிக்கணும்னு சொன்னார்.  அந்த மாதிரி பெரியவாள எல்லாம் பாக்கறது, அங்க அந்த ஸ்வாமியை அலங்காரம் பண்ணி, மஹாபெரியவாளோட ஸ்வாமிகள் இருக்கிற மாதிரி ஒரு சித்திரத்தையும், ஸ்வாமிகளோட விக்ரஹத்தையும் அழகா அலங்காரம் பண்ணி, ஊருக்குள்ள மேள தாளத்தோட புறப்பாடு பண்ணுவா. பின்னாடி திருப்புகழ் பஜனை, வேத கோஷம், ஹரி பஜனை எல்லாம் எப்பவும்போல நன்னா நடந்தது. அதெல்லாம் பார்க்கும்போது ஸாலோக்யம்னு தோணித்து. ‘சராசராத்மகதநுத்⁴யாநே ப⁴வாநீபதே ஸாயுஜ்யம் மம ஸித்³த⁴மத்ர ப⁴வதி ஸ்வாமிந்

சிவானந்தலஹரி-28- எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை தியானித்து இருப்பதே ஸாயுஜ்ய முக்தி.!!

Image
  ஸாரூப்யம் தவ பூஜநே ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தநே ஸாமீப்யம் ஶிவப⁴க்திது⁴ர்யஜநதாஸாங்க³த்யஸம்பா⁴ஷணே । ஸாலோக்யம் ச சராசராத்மகதநுத்⁴யாநே ப⁴வாநீபதே ஸாயுஜ்யம் மம ஸித்³த⁴மத்ர ப⁴வதி ஸ்வாமிந் க்ருʼதார்தோ²ऽஸ்ம்யஹம் ॥ 28॥ இங்கேயே நான் க்ருதார்த்தனா இருக்கேன். செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். அடைய வேண்டியதை அடைஞ்சுட்டேன் அப்படீன்னு சந்தோஷமா சொல்றார்.  எனக்கு ஸித்தி கிடைச்சுடுத்து. முக்தின்னா இறந்த பின்ன தான் முக்தின்னு இல்லை. எனக்கு இங்கேயே முக்தி கிடைச்சுடுத்து. ‘ஸாரூப்யம் தவ பூஜனே’ – உன்னுடைய பூஜை பண்றது தான் ஸாரரூப்யம். விபூதி, ருத்ராக்ஷம் அணிஞ்சுண்டு, தன்னையே சிவமாக பாவிச்சுண்டு, சிவ பூஜை பண்ணா இங்கேயே நமக்கு ஸாரூப்ய முக்தி கிடைச்சுடுத்து. பஞ்சாயதன பூஜையில கூட, தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ ப்ரஹ்ம: ஸநாதன: | த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவேந பூஜயேத் || ன்னு ஒரு ஸ்லோகம் சொல்வா.  நம்முடைய அக்ஞானம்தான் நிர்மால்யம். அதை தூக்கிப் போட்டுடணும்.  இந்த உடம்பு தேவாலயம். இதுக்குள்ள பகவான் இருக்கார் அப்படிங்கிற எண்ணத்தோட அந்த பூஜையை பண்ணனும்.  ஒரு குழந்தையை நாம்ம குளிப்பாட்டி அலங்காரம் பண்ணா நமக்கு ஒரு சந்தோ

சிவானந்தலஹரி-27 ஸாரூப்யம் , ‘ஸாமீப்யம்,‘ஸாலோக்யம்’ ஸாயுஜ்யம்’‘

Image
சிவானந்த லஹரில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 27வது ஸ்லோகம். கரஸ்தே² ஹேமாத்³ரௌ கி³ரிஶ நிகடஸ்தே² த⁴நபதௌ க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜாऽமரஸுரபி⁴சிந்தாமணிக³ணே । ஶிரஸ்தே² ஶீதாம்ஶௌ சரணயுக³ளஸ்தே²ऽகி²லஶுபே⁴ கமர்த²ம் தா³ஸ்யேऽஹம் ப⁴வது ப⁴வத³ர்த²ம் மம மந: ॥ 27॥ பகவானுக்கு நம்மால என்ன கொடுத்துட முடியும்? அவர்கிட்ட எல்லாமே இருக்கு, அப்படீன்னு சொல்றது இந்த ஸ்லோகம்.  ‘கரஸ்தே² ஹேமாத்³ரௌ’ – உன்னுடைய கைகள்ல பொன் மலையான மேரு மலையே இருக்கு.  திரிபுர சம்ஹாரத்தின் போது மேருமலையையே வில்லா  எடுத்துண்டு போனார்.  அப்படி தங்க மலை இருக்கு உன் கைல… ‘ நிகடஸ்தே² த⁴நபதௌ’.. ‘கி³ரிஶ!’ – மலையில் உறைபவரே!   உன் பக்கத்துல தனபதியான குபேரன் எப்பவும் நின்னுண்டு இருக்கான்.  உனக்கு தோழன், தாஸன்.  என்ன வேணும்னாலும் அவன் கிட்ட கேட்டுக்கலாம். ‘ க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜாऽமர ஸுரபி⁴ சிந்தாமணி க³ணே’ – உன்னோட க்ருஹத்துல, ‘ஸ்வர்பூ⁴ஜா’ – அப்படீன்னா கற்பக விருக்ஷம்.  ‘ அமர ஸுரபி⁴’ – அப்படீன்னா காமதேனு.  ‘சிந்தாமணி’ – இதெல்லாம் கேட்டதை கொடுக்கக் கூடிய இரத்தினம், பசு, மரம்.  இதெல்லாம் உன்னுடைய வீட்டுலேயே இருக்கு.   ‘ஶிரஸ்தே² ஶீதாம்ஶௌ’ –

சிவானந்தலஹரி-26 - பரமேஸ்வரனுடைய திருவடியை சேவிக்கறதோட பேரின்பம்!!

Image
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம்.  இன்னிக்கு 26வது ஸ்லோகம். கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம் க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் । ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா- நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26 அப்படீன்னு ஒரு ஸ்லோகம். பரமேஸ்வரனுடைய திருவடியை சேவிக்கறதோட பேரின்பத்தை வர்ணிக்கறார்.  “‘ஹே கி³ரிஶ’ – மலையில் வசிப்பவரே!, ‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தர்சனம் பண்ணி… ‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்..   ‘ ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு… ‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலயும், கண்கள்லயும், மார்புலயும் வெச்சுண்டு… ‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிண்டு, ‘ ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களுடைய வாசனையை முகர்ந்து, ‘ ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும் கிடைக்காததான.. ‘முத³ம்’ – இப்படி அந்த பாதத்தை அனுபவிக்கற அந்த சந்தோஷத்தை… ‘கதா³ வா அநுப⁴விஷ்யாமி’ – நான் எப்ப அனுபவிக்கப

சிவானந்தலஹரி-25 பிரதோஷ வேளையில ஸ்வாமி தரிசனம்!!

Image
  ஸ்தவைர்ப்³ரஹ்மாதீ³நாம் ஜயஜயவசோபி⁴ர்நியமிநாம் க³ணாநாம் கேலீபி⁴ர்மத³கலமஹோக்ஷஸ்ய ககுதி³ । ஸ்தி²தம் நீலக்³ரீவம் த்ரிநயநமுமாஶ்லிஷ்டவபுஷம் கதா³ த்வாம் பஶ்யேயம் கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும் ॥ 25 || இது அந்த பிரதோஷ வேளையில ஸ்வாமி தரிசனம்.. ரிஷபாரூடராக .. ‘ உமாஶ்லிஷ்டவபுஷம்’ – உமா தேவியை அணைத்துக் கொண்டு… ‘ மத³கலமஹோக்ஷஸ்ய ககுதி³’- கொழுத்து விளங்கும் காளையினுடைய திமில்… ‘ககுதி³’ன்னா திமில்…  அந்த திமில் மேல அமர்ந்திருக்கிறார்…’ நீலக்³ரீவம் ‘ – கழுத்து நீலமா இருக்கு.  அந்த பிரதோஷ வேளையில ஆலகால விஷத்தை பானம் பண்ணி உலகத்தை… மூவுலகத்தையும், வெளியிலையும், உள்ளும் இருக்கிற உலகங்களை எல்லாம் காப்பாற்றினதுதான் அந்த மஹா பிரதோஷத்துடைய பெருமை.   அதை நினைச்சு பகவான்கிட்ட எல்லாரும் நன்றியோடு ஸ்தோத்ரம் பண்ற அந்த வேளை.  அந்த ‘ கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும்’ – கையில் மானும், பாதி வெட்டி இருக்கிற கோடாரி, ‘க²ண்ட³பரஶு’ இதையும் வெச்சிண்டிருக்கார்.    ‘ப்³ரஹ்மாதீ³நாம் ஸ்தவைஹி’ – பிரம்மா முதலிய தேவர்கள் எல்லாரும் அவரை ஸ்தோத்ரம் பண்றா… ’நியமிநாம் ஜயஜயவசோபி⁴ஹி’ – நியமமா இருக்கக் கூடிய சிவ பக்தர்களான ரிஷிகள் ‘

சிவானந்தலஹரி-24 கைலாசக் காட்சியினுடைய பெருமை.!!

Image
  24 வது ஸ்லோகமும் 25 வது ஸ்லோகமும் பார்ப்போம்.  அந்த 25 வது ஸ்லோகத்துல பிரதோஷ வேளையில ஸ்வாமி எப்படி தரிசனம் தருவாரோ அந்த காட்சியினுடைய வர்ணனை. இந்த 24 லுல கைலாசக் காட்சியினுடைய பெருமை. கதா³ வா கைலாஸே கநகமணிஸௌதே⁴ ஸஹக³ணை- ர்வஸந் ஶம்போ⁴ரக்³ரே ஸ்பு²டக⁴டிதமூர்தா⁴ஞ்ஜலிபுட: । விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி நிக³த³ந் விதா⁴த்ரூʼணாம் கல்பாந் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுக²த: ॥ 24 || அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம். ‘ கதா³ வா கைலாஸே’ – எப்போது கைலாச பர்வதத்தில்… ‘ கநகமணிஸௌதே⁴’ – கனகம்… தங்கமும், மணிகளும் இழைக்கப் பட்ட ஒரு உப்பரிகையில… ‘ வஸந்’ – இருந்துகொண்டு… ‘ ஸஹக³ணைஹி  வஸந்’ – ப்ரமத கணங்கள்… பரமேசுவரனுடைய பூத கணங்களோடு இருந்துகொண்டு, பரமேசுவரனுக்கு முன்னாடி… ‘ஶம்போ⁴ரக்³ரே ஸ்பு²டக⁴டிதமூர்தா⁴ஞ்ஜலிபுட:’ – இரண்டு கைகளையும் தலைமேல கூப்பிண்டு…  ‘ விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி நிக³த³ந்’ – ‘விபோ⁴’ங்கிற நாமாவளி சிவானந்தலஹரியில நிறைய வாட்டி வர்றது.  ‘ விபோ⁴ ’ன்னா எங்கும் நிறைந்தவர்னு அர்த்தம்.  ‘ ஸாம்ப³’ ன்னா அம்பிகையோடு கூடினவர்னு அர்த்தம்.  ‘ ஸ்வாமிந்’னா என்னுடைய தலைவரேன்னு அர்த்தம்.  ‘பரமஶிவ’ – அப

சிவானந்தலஹரி-23- விஷ்ணுத்வம், ப்ரம்மத்வம் வேண்டேன் ! சாக்ஷாத்காரத்தை கொடுத்துடுங்கோ!!

Image
சிவானந்தலஹரில 22வது ஸ்லோகத்துல… என் மனமாகிய திருடன் பேராசையினால பணக்காரா வீட்டுகுள்ள எல்லாம் போகப் பார்த்துண்டிருக்கான். ‘ஹே தஸ்கரபதே !’ – திருடர்களுக்கெல்லாம் தலைவனே! என் மனமாகிய திருடனை உன்னுடைய கட்டுப்பாட்டுல வெச்சுக்கோன்னு சொன்னார். 23வது ஸ்லோகத்துல… கரோமி த்வத்பூஜாம் ஸபதி³ ஸுக²தோ³ மே ப⁴வ விபோ⁴ விதி⁴த்வம் விஷ்ணுத்வம் தி³ஶஸி க²லு தஸ்யா: ப²லமிதி । புநஶ்ச த்வாம் த்³ரஷ்டும் தி³வி பு⁴வி வஹந் பக்ஷிம்ருʼக³தா- மத்³ருʼஷ்ட்வா தத்கே²த³ம் கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴ ॥ 23॥ அப்படீன்னு ஒரு ஸ்லோகம். ‘விபோ⁴ ’ன்னா எங்கும் நிறைந்தவர்… ‘ த்வத்பூஜாம் கரோமி’ – உன்னுடைய பூஜையை நான் பண்றேன்… ‘ஸபதி³ மே ஸுக²தோ³ ப⁴வ’ – உடனடியாக திருப்தியாகி, எனக்கு சுகத்தை பேரின்பத்தை அளிக்க வேண்டும். அது ஏன் பேரின்பம்னா, எனக்கு எது வேண்டாம்னு சொல்றார்னு பார்த்தா, அதுக்கும் மேலான ஒரு இன்பம் வேணும்னு கேட்கறார்.  அப்போ அது பேரின்பமாத்தான் இருக்க முடியும்… ‘ விதி⁴த்வம்’ – நீ ப்ரம்மாவோட பதவியோ… ‘விஷ்ணுத்வம்’ – விஷ்ணுவோட பதவியோ… ‘தஸ்யா: ப²லமிதி’ – இந்த பூஜைக்கு பலன் “உன்னை பிரம்மாவா ஆக்கறேன், விஷ்ணுவா ஆக்கறேன்னு” நீங்க சொன்னேள்னா..

சிவானந்தலஹரி-22-மனமாகிய திருடன் -தஸ்கணாநாம் பதேயே நம:’

Image
 இன்னிக்கு சிவானந்தலஹரில 22வது ஸ்லோகத்தை பார்ப்போம், ப்ரலோபா⁴த்³யைரர்தா²ஹரணபரதந்த்ரோ த⁴நிக்³ருʼஹே ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ப்⁴ரமதி ப³ஹுதா⁴ தஸ்கரபதே । இமம் சேதஶ்சோரம் கத²மிஹ ஸஹே ஶங்கர விபோ⁴ தவாதீ⁴நம் க்ருʼத்வா மயி நிரபராதே⁴ குரு க்ருʼபாம் ॥ 22॥ ‘ ப்ரலோபா⁴த்³யை’ – லோபம்… அப்படின்னா… பேராசை, ‘ப்ரலோபா⁴த்³யை:’ –  பேராசை முதலிய கெட்ட குணங்கள்னால… ‘ அர்தா²ஹரண பரதந்த்ர:’ – நிறைய பணத்தை எப்படியாவது நாம கவர்ந்து கொள்ளவேண்டும், பணம் நிறைய சம்பாதிச்சுடணும் அப்படிங்கிற ‘ பரதந்த்ர:’ – அதுக்கு அடிமையாகி, ‘த⁴நிக்³ருʼஹே ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ’ – பணக்கராளுடைய வீட்டுக்குள்ள, நுழையறதுக்கு என்ன வழி, அப்படீன்னு யோசிச்சிண்டு, ‘ ப்⁴ரமதி ப³ஹுதா⁴’ – பலவிதமா என்னுடைய ‘சேதஶ்சோரம் ’ – என் மனமாகிய திருடன் இதே யோசனைலயே இருந்ததுண்டு இருக்கான் – அப்படீங்கறார்.  இது நமக்கு ஒண்ணும்புரியலையே…  என் மனசு ஒண்ணும் திருடன் கிடையாதே அப்படீன்னு நம்ம நனைச்சுப்போம், எப்படி இதை புரிஞ்சுக்கணும்னா… ஒரு வேலைல இருந்தா இதைவிட பெரிய வேலை கிடைக்குமா? அது கிடைச்ச உடனே அங்க ஓடிப்போறது, இல்லைன்னு இன்னும் foreign போனா இன்னும் நிறைய பணம் வருமா,