Posts

ஒரு புன்னகையில் எரிந்த திரிபுரம்

Image
ஒரு புன்னகையில் எரிந்த திரிபுரம்   இறைவன் தன் பக்தர்களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப்போது சோதிப்பதுண்டு.  அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாளமாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழ்கிறது திருவதிகை திருக்கோவில்.  இது சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகும். ஒரு புன்னகையை மட்டுமே ஆயுதமாக ஈசன் எடுத்துக்கொண்டான் ... பாதங்களில் பலர் குவித்த ஆயுதங்கள்... ரதம் , வில் , திரிசூலம் , ஈட்டிகள் .. எதுவுமே ஈசன் நாட வில்லை .. தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர்.  இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள்.  தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும்.  நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.  வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத...

சிருங்கேரி சாரதா

Image
சிருங்கேரி சாரதா   துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார் சங்கரர் .   தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் இங்கு இருந்தது.  இங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும்போது ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய அற்புத காட்சியை சங்கரர் கண்டார்.  இயல்பாகவே, விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரர் இந்த இடம் மிகவும் சக்திவாய்ந்த இடம் என கருதினார்.  முன்பு உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தால் கட்டுப்படுத்தி தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று செய்த வேண்டுகோள் நினைவுக்கு வர, அதன்படியே அவளுக்கு ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார். அம்மா சாரதே உன்னை சௌந்தர்ய லஹரியில் வர்ணித்தேன் ...  ... உன்னை பாதி தான் வர்ணிக்க முடிந்தது .. மீதி பாதியை வர்ணிக்க உன் அருள் வேண்டும் சாரதே !  அம்பாள் சிரித்...

பூதப்றுத் ... நாமத்தின் பெருமை

Image
பூதப்றுத் ... நாமத்தின் பெருமை அவர் ஒரு ஏழை .. உடையிலும் வறுமை .. உள்ளமும் வறுமை ...   பெருமை கொண்ட இறைவன் பெயர்கள் பொறுமை இல்லா நெஞ்சமதில் நுழைய வில்லை ...  கருமை கொண்ட விழிகள் கருமை நிறத்தழகனை பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தன ..   அருமையாக பிரசவமாகும் நாட்கள் அவருக்கு அதிகமாக பிரசவ வலியை தந்தன  வாழவேண்டுமே என்ற கவலை ஒருபுறம் .. இன்று குழந்தைகளுக்கு கால் வயிறு கஞ்சி கிடைக்குமா ... என்ற கவலை மறுபுறம் ...காஞ்சி வரதன் சிரித்தான் அரங்கனாக .... கஞ்சி வரதப்பா என்று வாயில் வார்த்தை வராதவனுக்கு கஞ்சி தனை தர கொஞ்சம் நாடகம் புரிந்தான் ...  தினம் தினம் அரங்கனின் ஆலயம் செல்வார் அவர் .. ரங்கனை வணங்க அல்ல ... ரங்கன் தரும் பிராசதத்தை அதிகமாக பெற்றுக்கொண்டு காத்திருக்கும் பசிக்கு விடை கொஞ்சம் கொடுக்க ... முந்தி அடித்துக்கொண்டு வரிசையில் இருப்பார்  .. வாய் விட்டு கேட்பார் .. எனக்கு இன்னும் கொஞ்சம் போடுங்கோ .. இது போதாது ...  பார்ப்பவர்கள் முகம் சுளித்தனர்... கேட்பவர்கள் ரங்கா ரங்கா என்ன இது இப்படி ஒரு அல்பத்தை அனுப்பி உ...

மலரும் நாராயணீயம் 7

Image
மலரும் நாராயணீயம்  7 பட்டத்ரி : குருவாயூரப்பா எப்படி ஆயிரம் நாமங்கள் லலிதாவை புகழ்ந்து பாடியும் அகஸ்தியருக்கு திருப்தி வராமல் ஹயக்ரீவரான உன்னை இன்னும் அவளை புகழ வேண்டும் என்று நச்சரித்து லலிதா திரிசதி 300 ஸ்லோகங்கள் சொல்ல வைத்தாரோ  அது போல் இந்த நாராயணீயம் 100 தசகம் பாடியும் திருப்தி வரவில்லையே ... உன்னை இன்னும் வர்ணித்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது ...  என் ரோகங்கள் நீங்க வேண்டும் என்று உன்னை நச்சரித்தேன் ...  வேண்டாம் குருவாயூரப்பா ... அது என்னிடமே இருக்கட்டும் .. உன்னை பாடும்,  பார்க்கும் , உன்னுடன் தினம் பேசும் வரத்தை மட்டும் தா ... அது போதும் ...  குருவாயூரப்பன் : சிரித்தான் ...  பட்டத்ரி ... நான் சோதிப்பேன் பக்தர்களை ...  கொஞ்சம் கடுமையாகவும் சமயத்தில் நடந்து கொள்வேன் ..  உன்னிடம் நடந்து கொண்ட மாதிரி ...  என் பக்தர்கள் அனைவருமே வெட்டி எடுத்த தங்க கட்டிகள் ... அதை புடம் போடாமல் நகை செய்ய முடியாது ...  எனவே அவர்கள் கடைசியில் எல்லா நன்ம...

மலரும் நாராயணீயம் 6

Image
மலரும் நாராயணீயம்  6 பட்டத்ரி : ஏ குருவாயூரப்பா , இன்று 100 வது தசகம் ... உன் அருளால் உன்னை வர்ணிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தாயே ..  உன் கருணை யாருக்கு வரும் ? இது என்ன எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வரமா ?  அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வந்து எல்லோருக்கும் ரோக நிவர்த்தி செய்ததை காட்டிலும்  மிகப்பெரிய   ஔஷதம்  நாராயணீயம் அல்லவோ ?  குருவாயூரப்பன் : நாராயணீயம் என்று சொல்லி என்னை நன்றாக வேலை வாங்கினாய் .. என் தாய் யசோதை பார்த்திருந்தால் உன்னை சும்மா விட்டிருக்க மாட்டாள் ...  பட்டத்ரி : உன்னை வெறும் தலையை மட்டும் ஆட்ட சொன்னேன் ..  நீயோ நடித்து வேறு காண்பித்தாய் ...  மீனாக துள்ளிக்  குதித்தாய் , ஆமையாக நீந்தி காண்பித்தாய் ,  வராகமாக ஓங்காரம் செய்தாய் ,  நரசிம்மனாக கர்ஜித்தாய் ,  வாமனனாக மூன்று அடி அளந்து காண்பித்தாய்  என்னிடமும்  மூன்றடி  கேட்டாய் ...  பரசுராமனனாக கோடாலியை காண்பித்து பயமுறுத்தினாய் ..   ராமனாக வேடம் போட்டு அனுமனின் தரிசனமும் எனக்...

மலரும் நாராயணீயம் 5

Image
மலரும் நாராயணீயம்  5 பட்டத்ரி ஓவ்வொரு அவதாரமாக சொல்ல ஆரம்பித்தார் ... குருவாயூரப்பன் தலையை ஆட்டியதும் மட்டும் அல்ல அதே அவதாரத்தில் அங்கே அவன் லீலைகள் புரிந்ததை மீண்டும் நடத்தி காண்பித்தானாம் .. 1. * மச்ச அவதாரம் ... * (மத்ஸ்யம்)🐋🐬🐟🐠🦈 குருவாயூரப்பன் சன்னதியில் மீன்கள் துள்ளி குதித்தாம் ... நெத்திலி (Anguille Eel) விலாங்கு (Alose Hilsa) உல்லான்(Bar/ Seabass) கொடுவா (Barracuda /Barracuda) சீலா மீன் கோலா, (Papillon demer) Butterfly fish (விரால்) Blue Travelly பாரை Bramidae Pomfert வவ்வா Cabillaud Cod பன்னா Calamar Squid கனவாய் Carpe Carp கென்டை Coquille Saint-Jacques    Scallop இரட்டை வழி சோழி Crevette Shrimp/Prawn இறால் Chinchard Horse mackerel தேங்காய் பாறை Poisson chat Cat fish கெளுத்தி carp catla கென்டை cabillaud cod பன்னா Clovisse clam சிப்பி calamaar Squid கனவா Dolphin fish அயிலை  இப்படி இன்னும் பல பல மீன்கள் பட்டத்ரியை பார்த்து புன்ன...

மலரும் நாராயணீயம் 4

Image
மலரும் நாராயணீயம்  4 பட்டத்ரி குருவாயூரப்பா ... ஒரு குயில் பாடிய பாகவதத்தை ஒரு கிளி கொத்திய பாகவதம் எனும் பழத்தை நான் பிழிந்து சாரமாக ( juice) ஆக நாராயணீயம் என்ற பெயரில் தருகிறேன் ..   ஒவ்வொரு தசகம் முடியும் போதும் குருவாயூரப்பா என் ரோகங்களை  நிவர்த்தி செய் ( அதாவது நாராயணீயம் படிக்கும் எல்லோருடைய ரோகங்களையும் நிவர்த்தி செய் ) என்று உனக்கு அப்ளிகேஷன் போட்டு உன் பாதங்களில் வைக்கிறேன் ..   நான் முடிக்கும் போது உன் பெருமைகளும் என் அப்ளிகேஷன் நூறும் உன் பாதங்களில் இருக்கும் for your disposal .  குருவாயூரப்பன் என்ன பட்டத்ரி புதிர் போடுகிறாய் ..??   குயில் பாடிய பாகவதமா ? கிளி கொத்திய பாகவதமா ?  ஆமாம்   என்னை வேறு தலையை ஆட்ட சொல்கிறாய் ... சுளுக்கு அதற்குள் பிடித்துக்கொண்டு விட்டது ...  ஏன் இப்படி செய்கிறாய் ? நீ சொல்வதற்கு நான் சாட்சி என்று பெருமை ( தம்பட்டம் ) பீத்திக்கொள்ளவா ..  எல்லாவற்றிர்க்கும் நான் தலை ஆட்டுவதை விட தவறுகள் இருந்தால் மட்டுமே தலை அசைப்பதாய் வைத்துக்கொள்ளக் க...

மலரும் நாராயணீயம் 3

Image
மலரும் நாராயணீயம்  3 பட்டத்ரி குருவாயூரப்பா .... தியான ஸ்லோகம் எழுதிவிட்டேன் ... தயவு செய்து முதல் அடி எடுத்துக்கொடு மேலே சொல்ல குருவாயூரப்பன் பட்டத்ரி  வியாதிக்கு நமஸ்காரம்  என்று ஆரம்பித்தாய் அதுவும் என் சன்னதியில் ... என்னிடம் சரணடைந்த உன் வியாதி இந்த நாராயணீயத்தை நினைப்பவர்கள் சொல்பவர்கள் யாருக்கும் வராது .. இது சத்தியம் ... அவர்கள் வாழ்க்கை உண்மையில் ஆனந்தமாக இருக்கும் ... *ஸாந்த்₃ரா ஸாந்த்₃ரா ஸாந்த்₃ரா.......* பட்டத்ரி : குருவாயூரப்பா உடம்பெல்லாம் உணர்ச்சிகள் இல்லாவிட்டாலும் மெய் சிலிர்ப்பதை உணர்கிறேன் ... இதோ வாங்கிக்கொள் என் முதல் ஸ்லோகத்தை सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् । अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥ ஸாந்த்₃ரா நந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம் நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |  அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம் தத்தாவத்₃பா₄தி ஸ...

மலரும் நாராயணீயம் 2

Image
மலரும் நாராயணீயம்  2 பட்டத்ரி : குருவாயூரப்பா ..  நீ சிரிப்பதின் அர்த்தம் புரியவில்லை ... ஏதாவது தப்பாக கேட்டுவிட்டேனா ?  குருவாயூரப்பன் : இல்லை பட்டத்ரி ..  நீயும் தவறாக கேட்கவில்லை நானும் தப்பாக புரிந்து கொள்ள வில்லை ...  பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு தியான ஸ்லோகம் தேவை ..   நேராக பாடல் ஆரம்பிக்கக் கூடாது ..  அதைப்பற்றி நீ ஒன்றும் சிந்திக்க வில்லையே என்று நினைத்தேன் ... என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன் ..  பட்டத்ரி : ஆமாம் .. மறந்து விட்டேன் ... யாரை நினைத்து எழுதுவது குருவாயூரப்பா .. நீயே சொல்லேன் ..  குருவாயூரப்பன் :  ம்ம் எனக்கு என்ன தெரியும் ... உன் குருவை நினைத்துக்கொள் , இல்லை உன் தாய் அல்லது தந்தையை நினைத்துக்கொள்  அல்லது உன் வீட்டில் வேலை செய்யும்  வேலைக்காரனை நினைத்துக்கொள்  இல்லையா உன் ஜோசியரை நினைத்துக்கொள்  இல்லையா உன்னை இங்கே தூக்கிக்கொண்டு வந்தார்களே 10 பேர்கள் அவர்களில் ஒருவரையாவது நினைத்துக்கொள் ... இவ்வளவு பேர்களில் யாருமே நினைவுக்கு வரவில்லை என்றால் இதோ அப்பாவியாக நின்று கொண்டு...

மலரும் நாராயணீயம் 1

Image
மலரும் நாராயணீயம்  1 குருவாயூரப்பன் : பட்டதரி  எப்படி அமைக்கப்போகிறாய் நாராயணீயத்தை  ... கொஞ்சம் சொல் பார்ப்போம்  பட்டத்ரி : ஐயனே .. உன் பாகவதம் 18000 ஸ்லோகங்கள் உடையது ... பெரிய கந்தங்கள் கொண்டது .. சுருக்கமானதாக இல்லை ... எல்லோரும் சொல்லும் படியாகவும் இல்லை .. நாராயணீயம் அப்படி அமைந்து விடக்கூடாது .. அதனால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொல்ல ஆசை ...  குருவாயூரப்பன் : எப்படி சுருக்கமாகவும் பிறகு விளக்கமாகவும் சொல்ல முடியும் ?  பட்டத்ரி : ஐயனே பாகவதம் பலர் சொல்லி வாழையடி வாழையாய் வந்தது ... அது எவ்வளவு உண்மை என்று தெரியாது ... ஆனால் நாராயணீயம் உன் சமந்தத்தில் எழுத போகிறேன் .. ஓவ்வொரு தசகம் முடிந்தவுடன் நீ உண்மை என்று தலை ஆட்டவேண்டும் ... அதுவே ஒரு சிறந்த விளக்கமாக மாறிவிடும் ...  குருவாயூரப்பன் : உன் தலை ஆடவில்லை என்பதால் என் தலையை ஆட வைக்கிறாய் .. ம்ம்ம் மேலே சொல். பட்டத்ரி ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பேன் .  நீ  “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோக...